21 Jul 2010

நம் நட்பு


*** அழுது கொண்டே வந்தேன் ****
*** நீயும் அப்படியே வந்தாய் ***
*** இருவரும் சிரித்தோம் ***
*** பேசிப்பழகினோம் ***
*** என் உணவை நீ உண்டாய் ***
*** உன் உணவை நான் உண்டேன் ***
*** ஒன்றாய் சுற்றி திரிந்தோம் ***
*** ஒன்றாகவே தவறும் செய்தோம் ***
*** என்னை உன் அம்மா திட்டினாள் ***
*** உன்னை என் அம்மா திட்டினாள் ***
*** அழகாய் இன்றும் தொடர்கிறது ***
***** நம் நட்பு *****

20 Jul 2010

அழகானவள்



எனக்கு பிடித்தவை:)

எனக்கு பிடித்தவை:)

உன் பெயர் - உன்னால் அழகாகும் என் பெயர்

உன் சிரிப்பு - என்னை சிரிக்க வைக்கும் உன் அழகு

உன் அழுகை - என்னையும் கலங்க வைக்கும்

உன் எதிர்பார்ப்பு - அதுவே என்னுடையதும்

உன் வருகை - காத்துகொண்டிருக்கிறேன்

உன் புன்முறுவல் - என்னையும் சிரிப்பூட்டுகின்றன

உன் அடக்கம் - அது உந்தன் வெட்கத்தின் அடையாளம்

உன் மனிதாபிமானம் - அது உந்தன் குணாதிசயம்

உன் நேர்மை - என்னிடம் இருந்து தொற்றி கொண்டதோ

உன் கள்ளத்தனம் - அது உந்தன் அழகு

என் கவிதைகள்






19 Jul 2010

நட்பு


நினைவுகள் என்றும் பிரிவதில்லை
அதை,
நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை
நட்பும் அதை போலதான்.....
அவர்களை பிரிந்த பின்பு,
காலம் கடந்து,
நம் வாழ்க்கை சரித்திரத்தை
புரட்டி பார்க்கும் போது,
இனிய நினைவுகளாய் இந்த "slam book "
உங்கள் வாழ்க்கையில் வீற்றிருக்கும்....
என்றும் உங்கள் நினைவுகள் மலர....

மலரும் நினைவுகளாய்

13 Jul 2010

முயற்சி


மனிதா,

உன் மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல

உன் முயற்சி நின்றால் கூட மரணம் தான்

- Dr.A.P.J. அப்துல் கலாம்.

12 Jul 2010

பூவை சூடிக்கொள்ளாதே

பூக்கள் உனக்காக பூத்து குலுங்குகின்றன...
அவசரப்பட்டு அவற்றை பறித்து
உன் கூந்தலில் சூடிக்கொள்ளாதே

அவை, உன் முகத்தையும்
உன் சிரிப்பையும் பார்க்க துடிக்கின்றன...

9 Jul 2010

என் இதயம்

என் இதயம் எனக்கு துரோகி

அது உனக்காகவே

அதிகம் துடிக்கிறது....



ஆனால், அதற்குள்

நீ அல்லவா குடியிருக்கிறாய்...

8 Jul 2010

அவள் சிரிப்பு

அழகாய் சிரிக்கிறாள்

பயமாய் இருக்கிறது

அவள் கன்னக்குழியினில்

விழுந்து விடுவேனோ

என்று...

என் நினைவில்


நான்

விழித்தெழும்போது நீ பனியாக வருகிறாய்
அருந்தும்போது சுவையாக வருகிறாய்
உண்ணும்போது மணமாக வருகிறாய்

படிக்கும்போது கவிதையாக வருகிறாய்
எழுதும்போது தமிழாக வருகிறாய்
பேசும்போது வார்த்தையாக வருகிறாய்

சுவாசிக்கும்போது காற்றாக வருகிறாய்
உதவும்போது கரமாக வருகிறாய்
உறங்கும்போது கனவாக வருகிறாய்

என்று நீ
என் மனைவியாக போகிறாய்.....

6 Jul 2010

ஒருதலைக் காதல்


அவன் கானலுக்குள்


மீன் பிடித்தான்


ஒருதலைக் காதல்

அக அழகு


தோற்றத்தை விட


குரல் அழகு


குயில்

my finding

usually i write poems,

but sometimes

i write ur name also

அடையாளம்


புன்னகை முகத்தின் அடையாளம்

வெட்கம் பெண்மையின் அடையாளம்

கனவு அது உந்தன் அடையாளம்

கவிதை இது எந்தன் அடையாளம்