1 Sept 2010

காத்திருக்கிறேன்

காத்திருத்தல்
எனக்கு பிடிக்காத ஒன்று...

யாருக்காகவும் காத்திருப்பது
எனக்கு பிடிக்கவில்லை...
யாரையும் நான்
காத்திருக்க வைப்பதுமில்லை....
ஆனால்,
இங்கே
நான் பல வருடங்களாக
காத்துகொண்டிருக்கிறேன்

உனக்காக
உன் வருகைக்காக.....
என் கவிதைகளோடு

விக்கல்


14 Aug 2010

ஏக்கம்


அழகு


கனவு




கல்வி பற்றி என் கருத்து

கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. கல்வி மனிதனை மனிதனாகவே இருக்க வைக்கிறது.. உலகிலேயே சிறந்தது கண்தானம், ரத்ததானம், அன்னதானம் என்று பல கருத்துக்கள் உண்டு.. ஆனால் உண்மை என்னவென்றால், கல்வி தானம் இந்த மூன்றையும் விட சிறந்தது.. ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு, பாடசாலைக்கு சென்றால் மட்டுமே கிடைப்பதில்லை... நாம் கல்வியை அன்றாடம் பழகும் மனிதர்களிடமிருந்தும், நாம் பேசும், உரையாடும், தவறு செய்யும் சில விஷயங்களிலும் இருந்தும் கற்றுகொள்கிறோம்... நாம் சந்திக்கும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு செயலும், ஏதோ ஒன்றை நமக்கு சொல்லித்தருகிறது... அதை சிலர் புரிந்து கொள்ளாமலே கற்கின்றனர்..... ஒரு திறமைமிக்க வல்லரசு நாடு என்பது, நல்ல சமுதாயத்தை கொண்டே அமைகிறது... அது மாணவர் சமுதாயம்... தொழில் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும், வியாபார சக்தியிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் பல நாடுகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத்தான் இருக்கும்... அந்நாடுகள் கல்வியை ஊக்குவிக்கின்றதோ இல்லையோ, நல்ல கல்வி பயின்ற திறமையுடைய மனிதர்களை வைத்து, நாட்டின் வளர்ச்சியை பெருக்கிகொள்கிறது..... ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அவசியம்... இன்றும் பல கிராமங்களில், பள்ளிகூடங்கள் இல்லாத நிலை நீடித்துகொண்டிருக்கிறது.... அதுமட்டுமல்லாது, பல குழந்தைகள், மாணவர்கள் பல தூரம் பிரயாணித்தும், நடந்து சென்றும் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது... நம் பிரதமர் ஏற்படுத்திய திட்டம், ஊருக்கு ஒரு பள்ளி, ஐந்து கிலோமீட்டர்க்குள் ஒரு பாடசாலை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது... இருந்தும், இன்றும் பல கல்லூரிகளில் சில ஆசிரியர்களும் சரிவர வருவதில்லை, ஒரு தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில்லை..... நகரங்களில், சில பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் சரிவர செல்வதில்லை... தயவு செய்து மாணவர்களே படியுங்கள் உங்களுக்காகவும் நாட்டிற்காகவும்..... கிரிக்கெட்டில் மட்டும் தலை நிமிர்ந்து நின்றால் போதாது, நாட்டின் வளர்ச்சியிலும் நாம் உயர்ந்து நிற்க வேண்டும்..... உங்கள் கல்வி இந்திய ராணுவ படையை விட சக்திவாய்ந்ததாகும்... உங்களின் இன்றைய உழைப்பு (கல்வி) நாளைய இந்திய வரலாறு.....
இந்தியா நிச்சயம் 2020 ல் வல்லரசாகும் என்ற நம்பிக்கையில்...

9 Aug 2010

உங்களுக்காக நான்

நான் இன்று ஒரு கவிஞன் என்று நினைத்துபார்பதற்கு பெருமையாக இருக்கிறது. எல்லோரும் பொதுவாக நினைப்பது என்னவெனில், கவிதை எழுதுபவர் எல்லாம், காதல் வசப்பட்டவர்கள் தான் என நினைக்க தோன்றும்.. அப்படியெல்லாம் இல்லை... காதல் என்பது அன்பு, ஒன்றின் மீது நாம் வைக்கும் ஈடுபாடு, நம்பிக்கை, உணர்ச்சி, ஆசை, கவனம் போன்றவையே நமக்கு அதின் மீது, ஒரு ஈர்ப்பு உண்டாக காரண மாக அமைகிறது... ஒரு விஷயத்தை ஆழமாக நேசித்தால் போதும், அதை பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ளலாம், எதை நாம் தெரிந்து கொள்ள வில்லையோ அதை நாம் நேசிக்கவில்லை என்று அர்த்தம். சரி, விஷயத்துக்கு வருவோம், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கையில், எங்கள் economic professor எங்களை, தாய் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி வரசொன்னார், அப்போது என் நண்பன் ஒருவன், அழகான தமிழில் ஒரு கவிதை வரைந்தான்... அவனின் ஆர்வமும் கவிதை நயமும், அவன் ஒன்றின் மெத்து வைக்கும் அபிமானமும் எனக்கு மிகவும் பிடித்தது.. அதுவே என்னை கவிதை வரைய தூண்டியது... வாழ்க்கையில், எல்லா மாணவர்களும் பள்ளி, கல்லூரி பருவத்தை கடந்து வருகிறார்கள்... அவள் கடக்கும் பாதையில் பல முட்களும் பல பூக்களும் இருந்திருக்கும்... வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று, இளமைபருவத்திலேயே கற்றுக்கொள்ளத்தான் நமக்கு சொல்லித்தருகிறது.. யார் யாரிடம் பழக வேண்டும், எந்தெந்த தவறான பழக்கத்தை நாம் ஒதுக்கவேண்டியது, யாரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை பற்றி..... அதுமட்டுமல்ல, வாழக்கையில் நட்பு, காதல் இந்த இரண்டையும் நாம் காண்பது இப்பருவதிலே.... நம் வாழ்க்கை, நம் எண்ணம், நம் சிந்தனை, நம் குணாதிசயம் (கேரக்டர்) நாம் சேரும், நம்மோடு இருக்கும் பழகும் நண்பர்களை பொறுத்தே அமைகிறது..... ஆகவே, பள்ளிபருவத்தில், கற்றுக்கொள்ளுங்கள் நல்லவற்றை, தெரிந்துகொள்ளுங்கள் நல்ல நண்பர்களை, விலகி நில்லுங்கள் தீயவர்களிடம் இருந்து, வாழுங்கள் உங்கள் வாழ்க்கையை இன்பமாக...

5 Aug 2010

நண்பனே உனக்காக...

நண்பனே,

பிரிவு நம்மை பிரித்தாலும்

உறவு நம்மை இணைக்கிறது

ஆம், நட்பெனும் உறவு


இரு உள்ளங்களை இணைக்கும்

காதலிலும் தோல்வியுண்டு

நட்பில் அது இல்லை ...

நண்பனே,

அண்டங்களில் மிதக்கும்

பூமியெனும் உருண்டையில்

ஒப்பற்ற ஒரே உறவாம் நட்பு,

உன் பிரிவிற்காக உள்ளம் ஏங்குகிறது...

நட்பே,

உன்னை பற்றி எழுத வார்த்தைகளை தேடினேன்

கிடைக்கவில்லை!!!

நட்பெனும் வார்த்தைக்கு பொருளறிந்தேன்...

உன்னிடத்தில் எதையும் எதிர்பாராதது!!! என

இலைச்சருகுகள் என்னவோ

காய்தலை அறியாது,

நானும் உன் பிரிவை,

இதுவரை அறியவில்லை...


காதலனாய் இருந்துப்பார்,

முடியாது மனதின கட்டுபடுத்த...

தூய நண்பனாய் இருந்துப்பார்,

முடியாது அவனிடம் பொய் சொல்ல...

இவ்வுலகினில்,

காதலின்றி வாழ்த்திட இயலும்

நட்பின்றி வாழ்வது கடினம்,

நம் வாழ்வில் கடைசிவரை நீடிக்கும்

ஒரே உறவு - நட்பு

எங்கெங்கோ பிறந்தோம்

எங்கெங்கோ படித்தோம்

கல்லூரியில் இணைந்தோம்

நட்போடு மகிழ்ந்தோம்

குடும்பமாய் வாழ்ந்தோம்

சிறு கண்ணீரோடு பிரிவோம்....


உண்மை கவிதை எழுதினால் தெரியும்,

உண்மை காதல் மனதினை அறியும்,

உன்னை உறவுகள் வறுமையில் தெரியும்,

உன்னை நட்பு துன்பதினில் புரியும்...

காதலுக்கு எல்லை உண்டு

நம் பார்வைக்குள் அடங்காத

வானுக்கும் எல்லை உண்டு

நட்புக்கு அது இல்லை

நட்பு உறவுகளை விட மேலானது

வறுமையிலும் மாறாதது...

என்றும் அன்புடன்,

உங்கள் நண்பன்






4 Aug 2010

புவியீர்ப்பு விசை




பூவை சுற்றிவரும்
வண்ணத்துபூச்சி போல

என்னை சுற்றித்திரிகின்றன

உன் நினைவுகள்;
அவை இருட்டில் கூட என்னை


விட்டு செல்ல விரும்பவில்லை;;;;

பூச்சூடவா...


2 Aug 2010

என்றும் நட்புடன்

என் தலை சாய, உன் மடி வேண்டும் - இது காதல்

என் தலை சாய, உன் தோள் வேண்டும் - இது நட்பு

நட்பு உறவுகளை விட மேலானது

இவ்வுலகினில் இனி நட்பே மொழியாகட்டும்

- என்றும் நட்புடன்

21 Jul 2010

நம் நட்பு


*** அழுது கொண்டே வந்தேன் ****
*** நீயும் அப்படியே வந்தாய் ***
*** இருவரும் சிரித்தோம் ***
*** பேசிப்பழகினோம் ***
*** என் உணவை நீ உண்டாய் ***
*** உன் உணவை நான் உண்டேன் ***
*** ஒன்றாய் சுற்றி திரிந்தோம் ***
*** ஒன்றாகவே தவறும் செய்தோம் ***
*** என்னை உன் அம்மா திட்டினாள் ***
*** உன்னை என் அம்மா திட்டினாள் ***
*** அழகாய் இன்றும் தொடர்கிறது ***
***** நம் நட்பு *****

20 Jul 2010

அழகானவள்



எனக்கு பிடித்தவை:)

எனக்கு பிடித்தவை:)

உன் பெயர் - உன்னால் அழகாகும் என் பெயர்

உன் சிரிப்பு - என்னை சிரிக்க வைக்கும் உன் அழகு

உன் அழுகை - என்னையும் கலங்க வைக்கும்

உன் எதிர்பார்ப்பு - அதுவே என்னுடையதும்

உன் வருகை - காத்துகொண்டிருக்கிறேன்

உன் புன்முறுவல் - என்னையும் சிரிப்பூட்டுகின்றன

உன் அடக்கம் - அது உந்தன் வெட்கத்தின் அடையாளம்

உன் மனிதாபிமானம் - அது உந்தன் குணாதிசயம்

உன் நேர்மை - என்னிடம் இருந்து தொற்றி கொண்டதோ

உன் கள்ளத்தனம் - அது உந்தன் அழகு

என் கவிதைகள்






19 Jul 2010

நட்பு


நினைவுகள் என்றும் பிரிவதில்லை
அதை,
நெஞ்சம் எப்போதும் மறப்பதில்லை
நட்பும் அதை போலதான்.....
அவர்களை பிரிந்த பின்பு,
காலம் கடந்து,
நம் வாழ்க்கை சரித்திரத்தை
புரட்டி பார்க்கும் போது,
இனிய நினைவுகளாய் இந்த "slam book "
உங்கள் வாழ்க்கையில் வீற்றிருக்கும்....
என்றும் உங்கள் நினைவுகள் மலர....

மலரும் நினைவுகளாய்

13 Jul 2010

முயற்சி


மனிதா,

உன் மூச்சு நின்றால் மட்டும் மரணமல்ல

உன் முயற்சி நின்றால் கூட மரணம் தான்

- Dr.A.P.J. அப்துல் கலாம்.

12 Jul 2010

பூவை சூடிக்கொள்ளாதே

பூக்கள் உனக்காக பூத்து குலுங்குகின்றன...
அவசரப்பட்டு அவற்றை பறித்து
உன் கூந்தலில் சூடிக்கொள்ளாதே

அவை, உன் முகத்தையும்
உன் சிரிப்பையும் பார்க்க துடிக்கின்றன...

9 Jul 2010

என் இதயம்

என் இதயம் எனக்கு துரோகி

அது உனக்காகவே

அதிகம் துடிக்கிறது....



ஆனால், அதற்குள்

நீ அல்லவா குடியிருக்கிறாய்...

8 Jul 2010

அவள் சிரிப்பு

அழகாய் சிரிக்கிறாள்

பயமாய் இருக்கிறது

அவள் கன்னக்குழியினில்

விழுந்து விடுவேனோ

என்று...

என் நினைவில்


நான்

விழித்தெழும்போது நீ பனியாக வருகிறாய்
அருந்தும்போது சுவையாக வருகிறாய்
உண்ணும்போது மணமாக வருகிறாய்

படிக்கும்போது கவிதையாக வருகிறாய்
எழுதும்போது தமிழாக வருகிறாய்
பேசும்போது வார்த்தையாக வருகிறாய்

சுவாசிக்கும்போது காற்றாக வருகிறாய்
உதவும்போது கரமாக வருகிறாய்
உறங்கும்போது கனவாக வருகிறாய்

என்று நீ
என் மனைவியாக போகிறாய்.....

6 Jul 2010

ஒருதலைக் காதல்


அவன் கானலுக்குள்


மீன் பிடித்தான்


ஒருதலைக் காதல்

அக அழகு


தோற்றத்தை விட


குரல் அழகு


குயில்

my finding

usually i write poems,

but sometimes

i write ur name also

அடையாளம்


புன்னகை முகத்தின் அடையாளம்

வெட்கம் பெண்மையின் அடையாளம்

கனவு அது உந்தன் அடையாளம்

கவிதை இது எந்தன் அடையாளம்

30 Jun 2010

தாஜ் மஹால்

காதலி உறங்கினாள்

காதல் விழித்தெழுந்தது

வெண்மை நிறத்தினில்...

a bouquet to you


i send a bouquet to you,
it has green, white and red roses,

green for your kindness
white for your patiene
red for your anger

but, they are all so angry on u
dont keep with you all.
because they felt,


how to live and born beautiful
atleast in next birth like you.

ஞானம்



சில நேரங்களில் சில விஷயங்கள்


நமக்கு அனுபவத்தை கொடுக்கும்.....


சில நேரங்களில் சில அனுபவங்கள்


நமக்கு பலவற்றை கற்றுகொடுக்கும்...

29 Jun 2010

நண்பன்

உன்னை பார்த்த முதல் கவிதை எழுதினேன்

உன்னை படித்த முதல் உன் ரசிகன் ஆனேன்

உன்னுடன் பழகியதால் அறிஞன் ஆனேன்
உன்னோடு என்றும்

இந்த இனிய நண்பன்
கணேஷ்.சு