ஆக்கம் : S.கணேஷ்
மழை துளியே நீ
அழகாய் இருக்கிறாய்
என்னவளின் நெற்றி பொட்டைபோல..
வானவில்லே,
நீயும் அழகாய் இருக்கிறாய்
என்னவளின் ஆடையை போல
மழைத்துளிமுற்றுபுள்ளி ஆனாலும்,
பனிக்காற்று வீசிகொண்டிருக்கும்
என் கவிதை வரிகளில்...
என் பேனாவின் கண்ணீர் - கவிதை
கண்ணீரை சுமக்கிறாய்
நீயும் என் நண்பன் தான்என்
இனிய கைகுட்டையே
உன் நினைவுகளாக சிதறி கிடக்கின்றன
நட்சத்திரங்கள்..
கருமேகங்களாய் கண்ணை மறைக்கின்றன
என் தவறுகள்
தினம் விடிகிறது உன் நினைவுகளோடு.
ஒதுக்கி வைத்த பின்னும் அலைகிறது,
கலைத்துவிட்ட தேன் கூட்டை போல